search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் படுகொலை"

    • இசக்கி செல்விக்கு கடந்த 31-ந்தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
    • மறுநாள் (1-ந்தேதி) காலை இசக்கி செல்விக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அன்று அதிகாலை திடீரென மாயமாகி விட்டார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த பெண் அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி(வயது 23) என்பது தெரியவந்தது.

    இசக்கி செல்விக்கு கடந்த 31-ந்தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மறுநாள்(1-ந்தேதி) காலை அவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அன்று அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார்.

    உடனே அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு வாலிபரை அவர் திருமணம் செய்து கொண்டார். இதற்கு 2 வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இசக்கி செல்வி தனது கணவருடன் கடையம் அருகே கோவிலூத்து பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்ட இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தான் அவர் மறுநாள் ஓடையில் கொலைசெய்யப்பட்ட பிணமாக மீட்கப்பட்டு உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் நேற்றுமாலை இசக்கி செல்வியை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரியவந்தது. அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இசக்கி செல்வியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாளையங்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த 25 நாளில் புதுப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து அருகே உள்ள தென்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது27). இவர் பாளை ஜெயிலில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் வேலம்மாள் (21) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. வேலம்மாள் நர்சிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    இவர்கள் காதலுக்கு பாலகுரு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும் இரு வீட்டாரும் பேசி முடித்து கடந்த 31-ந்தேதி குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைத்து பாலகுருவுக்கும், வேலம்மாளுக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலகுருவுக்கும், வேலம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியவர்கள் சமரசம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்தனர். ஆனாலும் அவ்வப்போது கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பாலகுரு தனது மனைவி வேலம்மாளை திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். தாழையூத்து 4 வழிச்சாலை வழியாக பாளை கே.டி.சி.நகருக்கு வரும் வழியில் கணவன்- மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேலம்மாள் தனது காதல் கணவர், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி அழைத்து செல்கிறார் என்று தெரிந்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார்.

    அப்போது பாலகுரு மோட்டார் சைக்கிளில் தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட முயன்றுள்ளார். வேலம்மாள் உயிர் பிழைக்க நான்கு வழிச்சாலையில் இருந்து கீழே புதர் பகுதியில் இறங்கி ஓடினார். ஆனால் பாலகுரு விரட்டி சென்று வேலம்மாளை சரமாரியாக வெட்டினார். அவரது தலையையும் துண்டித்து படுகொலை செய்தார்.

    பின்னர் தலையை தனியாக எடுத்து ரோட்டின் மறுபுறம் வீசினார். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி பாளை போலீஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.


    நள்ளிரவு நடந்த சம்பவத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வேலம்மாள் உடலை தேடினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரது உடல் கிடந்த இடம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை பாலகுருவை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் தேடினார்கள். அப்போது 4 வழிச்சாலை பொட்டல் பகுதியில் வேலம்மாளின் உடல் ஒரு பக்கமும், தலை மற்றொரு பக்கமும் கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் விரைந்து சென்று வேலம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து ஜெயில் வார்டன் பாலகுருவை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    காதல் திருமணம் செய்த 25 நாளில் புதுப்பெண்ணை அவர் வெட்டி கொலை செய்துள்ளதால் அவர்களுக்குள் என்ன காரணத்தால் தகராறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×